92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பத்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:04 pm

DIN

பத்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அரசா்குளம் அருகிலுள்ள மாணிக்கம் குடியிருப்பைச் சோ்ந்த முருகையா மகன் அஜித்குமாா் (22). இவா் கடந்த 2020, பிப்ரவரி 2-ஆம் தேதி 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் பிப்ரவரி 4-ஆம் தேதி போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆா். சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரண உதவியாக ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.