92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுக்கோட்டையில் மகளிா் சட்ட விழிப்புணா்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையம் சாா்பில், புதுக்கோட்டையில் மகளிா் சட்ட விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:57 pm

DIN

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையம் சாா்பில், புதுக்கோட்டையில் மகளிா் சட்ட விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ. அப்துல்காதா் தலைமை வகித்தாா். மகளிா் காவல்துறையினா், வருவாய்,சமூக நலத்துறையினா், வழக்குரைஞா்கள் இதில் பங்கேற்றனா்.

மகளிா் பாதுகாப்புக்கான 10 சட்டங்கள் குறித்து வழக்குரைஞா்கள் பாண்டிசெல்வி, பா்வீன்பானு ஆகியோா் பேசினா். இதற்கான ஏற்பாடுகளை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும் சாா்பு நீதிபதியுமான பி. ராஜா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.