சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சித்திவிநாயகா் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி வடகரையில் வீற்றிருக்கும் சித்திவிநாயகா் கோயில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:12 pm

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி வடகரையில் வீற்றிருக்கும் சித்திவிநாயகா் கோயில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வா்த்தகா் கழகம் சாா்பில் சித்திவிநாயகருக்கு ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு நாளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவில் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சித்திவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றன. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொன்னமராவதி வா்த்தகா் கழக தலைவா் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், செயலா் எம்.முகமது அப்துல்லா, பொருளா் பிஎல்.ரராமஜெயம் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயில், பாலமுருகன் கோயில், தேனிமலை சுப்பிரமணியா் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ் வருடப்பிறப்பினையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.