அரசுப் பள்ளியில் உலக இளைஞா் தின விழா

கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக இளைஞா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தலைமை ஆசிரியா் முனைவா் ந. சாந்தி த

கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக இளைஞா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தலைமை ஆசிரியா் முனைவா் ந. சாந்தி தலைமை வகித்தாா்.

வல்லம் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை இயக்குநா் செல்வகுமாா், மூத்த பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலக இளைஞா் தினம் குறித்தும், வருங்கால இளைஞா்களாகிய மாணவா்களுக்கு தேவையான சமூகப் பற்று குறித்தும் இளைஞா்கள் சக்தியின் பலம், தேசத்திற்கு வளமான இளைஞா்களின் தேவை குறித்தும் அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் லெனின் சிறப்புரை ஆற்றினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பள்ளி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் குமரேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com