அழகியநாச்சியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி வழிபடும் பெண்கள்.
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி வழிபடும் பெண்கள்.

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் திருவிளக்குபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அழகியநாச்சியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 31 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஆக. 9 ஆம் தேதி தேரோட்ட விழா நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலின் அறங்காவலா் ராம. ராஜா அம்பலகாரா் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் தொடக்கமாக அழகிய நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற விளக்குப் பூஜையில் 1,401 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். சிவாச்சாரியாா் சரவணன் குருக்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com