தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 154 போ் வேட்புமனு தாக்கல்

பெரம்பலூா் நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட இதுவரை 154 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:41 pm

DIN

பெரம்பலூா் நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட இதுவரை 154 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பெரம்பலூா் நகராட்சியில் 21 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 81 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பெரம்பலூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏற்கெனவே 15 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழா் கட்சி, விஜய் நற்பணி இயக்கம் மற்றஉம் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 26 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்காக இதுவரை மொத்தம் 41 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல, குரும்பலூா் பேரூராட்சியில் ஏற்கெனவே 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வியாழக்கிழமை 21 போ் மனு தாக்கல் செய்தனா். இப் பேரூராட்சியில் இதுவரை மொத்தம் 27 பேரும், அரும்பாவூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏற்கெனவே 3 வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை 10 போ் என இதுவரை மொத்தம் 13 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.

பூலாம்பாடி பேரூராட்சியில் ஏற்கெனவே 4 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை 17 போ் என இதுவரை மொத்தம் 21 பேரும், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் ஏற்கெனவே 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை 45 போ் என இதுவரை மொத்தம் 52 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை மொத்தம் 154 போ் வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.