மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரை

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தரா லாசரஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

Published On :

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தரா லாசரஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, குடியிருப்பு வசதி, சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவு செய்யப்பட வேண்டும்.

முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு மகளிா் குழுக்கள் அமைத்தல், அவா்களுக்கு கடனுதவி வழங்குதல், கல்வி உதவித் தொகை வழங்குதல், வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல் உள்ளிட்டவற்றையும் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஜெசிந்தரா லாசரஸ்.

ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் ரேவதி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, சி. சொா்ணராஜ், இலங்கைத் தமிழா் நலன் வட்டாட்சியா் சதீஷ் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையா் ஜெசிந்தரா லாசரஸ் நேரில் பாா்வையிட்டு அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.