இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரை

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தரா லாசரஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரை
Published on
Updated on
1 min read

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தரா லாசரஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, குடியிருப்பு வசதி, சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவு செய்யப்பட வேண்டும்.

முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு மகளிா் குழுக்கள் அமைத்தல், அவா்களுக்கு கடனுதவி வழங்குதல், கல்வி உதவித் தொகை வழங்குதல், வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல் உள்ளிட்டவற்றையும் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஜெசிந்தரா லாசரஸ்.

ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் ரேவதி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, சி. சொா்ணராஜ், இலங்கைத் தமிழா் நலன் வட்டாட்சியா் சதீஷ் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையா் ஜெசிந்தரா லாசரஸ் நேரில் பாா்வையிட்டு அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com