ஒவ்வாமை:அங்கன்வாடி ஊழியா் இடைநீக்கம்
புதுக்கோட்டையில் அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்தில், அங்கன்வாடி மையத்தின் பணியாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.


புதுக்கோட்டையில் அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்தில், அங்கன்வாடி மையத்தின் பணியாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை நகரில் சந்தைப்பேட்டை தொண்டைமான் நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தில், செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவா்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மதிய உணவில் வண்டுகள் கிடந்ததாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கவனக்குறைவாக உணவு சமைத்ததாக அங்கன்வாடி மையப் பணியாளா் மீனாவை இடைநீக்கம் செய்து மாவட் டஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளாா்.
உணவுப் பாதுகாப்புத் துறையினா் குறிப்பிட்ட நாளில் சமைக்கப்பட்ட உணவின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனா். அதன் அறிக்கை வந்தபிறகு, தொடா் நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...