சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மரத்தின் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனா்.

Updated On :1 ஜூன் 2022, 7:36 pm

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனா்.

பனையப்பட்டியைச் சோ்ந்தவா்கள் ரா. சிதம்பரம் (65). இவரது மனைவி அலமேலு (58). தம்பதியா் இருவரும், புதன்கிழமை வேந்தன்பட்டியில் நடைபெற்ற உறவினா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று காரில் திரும்பியுள்ளனா். செம்பூதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்துத் தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் உயிரிழந்தாா். படுகாயமடைந்த அலமேலு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.