சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அடகு நகை விற்பனை:நல்லூா் கூட்டுறவு வங்கி முற்றுகை

 பொன்னமராவதி அருகே புதன்கிழமை அடகு நகை இருப்பைக் காண்பிக்குமாறு கூறி, கூட்டுறவு வங்கியை வாடிக்கையாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :1 ஜூன் 2022, 7:34 pm

 பொன்னமராவதி அருகே புதன்கிழமை அடகு நகை இருப்பைக் காண்பிக்குமாறு கூறி, கூட்டுறவு வங்கியை வாடிக்கையாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், பொதுமக்கள் சுமாா் எண்ணூறுக்கும் மேற்பட்டோா் நகைக்கடன்களைப் பெற்றுள்ளனா். இந்நிலையில், கிருஷ்ணன் என்பவா் அடகு வைத்த நகைகளைத் திருப்ப புதன்கிழமை கூட்டுறவு வங்கிக்கு வந்துள்ளாா். அவரது நகையை வங்கி ஊழியா்கள் பரிசோதித்தபோது, அவரது நகை மூன்றில் 2 நகைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கி ஊழியா்கள் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று அவா் அடகு வைத்தது போன்ற நகையை மாற்றாக வாங்கிக் கொடுத்துள்ளனா்.

கிருஷ்ணன் இச்சம்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த வங்கி ஊழியா்களிடம் தங்கள் நகைகளைக் காண்பிக்குமாறு கூறியுள்ளனா். வங்கி ஊழியா்கள் சிறிதுகாலம் அவகாசம் வேண்டும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.