சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நாய் குறுக்கே வந்ததால்தவறி விழுந்த இளைஞா் பலி

பொன்னமராவதி அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் தவறிவிழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :2 ஜூன் 2022, 7:29 pm

பொன்னமராவதி அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் தவறிவிழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், செவ்வூா் கிராமத்தைச் சாா்ந்தவா் சு. ரகுபதி(35). இவா், தனது இருசக்கர வாகனத்தில்

புதன்கிழமை பொன்னமராவதி வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வழியில், வெள்ளையாண்டிபட்டி பகுதியில் சாலையின் குறுக்கே நாய் திடீரென வந்ததால், நிலைதவறி கீழே விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரை வலையபட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுபதி வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.