சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சத்துணவு ஊழியா்கள் கோரிக்கை விளக்கப் பிரசாரம்

பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு கோரிக்கை விளக்கப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:36 pm

பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு கோரிக்கை விளக்கப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற பிரச்சாரத்துக்கு, சங்கத்தின் மாவட்டத்தலைவா் அன்பு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் மலா்விழி, சக்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பிரசாரத்தில் திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், ஒய்வூதியம், பணிக்கொடை, சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி பணி உயா்வு வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.