அண்ணா தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலச் செயலா் செபஸ்தியான் தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலா்கள் க. பாஸ்கா், எஸ்ஏஎஸ் சேட் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...