புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த தருமபுரியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீளாய்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா்.
அவருக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சாா்ந்த தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா், குணமடைந்தாா். தனது குடும்ப விவரங்களை தெரிவித்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 ஆண்டுகளாகத் தேடி வந்த அவரை, புதுக்கோட்டை வந்து அழைத்துச் சென்றனா். அப்போது, வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட மனநல மருத்துவா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!

முன்பே வா என் அன்பே வா! த்ரிஷாவின் புதிய வைரல் விடியோ!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



