அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலைமை ஒதுக்கியும் துணைத் தலைவர் பதவிகளை இழந்த இடதுசாரிகள்

திமுக கூட்டணித் தலைமையில் இருந்து இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா ஒரு துணைத் தலைவர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட்டும், மறைமுகத் தேர்தலில் வாய்ப்பை இழந்தனர். இரு இடங்களையும் திமுகவே கைப்பற்றியது.

News image
Updated On :4 மார்ச் 2022, 12:28 pm

DIN

திமுக கூட்டணித் தலைமையில் இருந்து இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா ஒரு துணைத் தலைவர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட்டும், மறைமுகத் தேர்தலில் வாய்ப்பை இழந்தனர். இரு இடங்களையும் திமுகவே கைப்பற்றியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 189 இடங்களில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீரனூர் மற்றும் கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீரமங்கலத்தில் ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் தோல்வியடைந்தன. இந்தத் தோல்விக்குக் காரணம். திமுகவினரே சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதுதான் காரணம்.

இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான இடஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில், கீரமங்கலம் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கீரனூர் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால், கீரனூர் பேரூராட்சியில் 6ஆவது வார்டில் வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மா. மகாலட்சுமி, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை. மாற்று ஏற்பாட்டைச் செய்துவிட்டதாகவும், விட்டுத்தர வேண்டும் என்றும் முதல் நாளே (வியாழக்கிழமை) மாவட்ட திமுக தலைமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையை வலியுறுத்தியிருக்கிறது. இதன்படி திமுக வேட்பாளராக முகமது இம்தியாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்து வென்றார்.

கீரமங்கலம் பேரூராட்சியில் 11ஆவது வார்டில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் த. முத்தமிழ்செல்வியை, துணைத் தலைவர் வேட்பாளராக திமுக தலைமை முன்மொழிந்தது. அதேநேரத்தில் திமுக உறுப்பினர் தமிழ்ச்செல்வனும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இருவருக்கும் இடையே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழ்ச்செல்வன் வென்றார். முத்தமிழ்செல்வி தோற்றார்.

இந்தச் சம்பவங்களை அடுத்து இடதுசாரிக் கட்சியினர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.