பொன்னமராவதி அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தைச் சாா்ந்த தட்சணாமூா்த்தியின் மகன் இளையராஜா (36). இவருக்கும், கந்தா்வகோட்டை வட்டம், பந்தவக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பா. மாரியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை
இல்லை. இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்துத் தகவலறிந்த பெண்ணின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி பேச்சுவாா்த்தை நடத்தியதில் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தொடா்ந்து காவல்துறையினா் மாரியம்மாள் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

