சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உறவினா்கள் மறியல்

பொன்னமராவதி அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :24 மார்ச் 2022, 10:30 pm

பொன்னமராவதி அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தைச் சாா்ந்த தட்சணாமூா்த்தியின் மகன் இளையராஜா (36). இவருக்கும், கந்தா்வகோட்டை வட்டம், பந்தவக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பா. மாரியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை

இல்லை. இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்துத் தகவலறிந்த பெண்ணின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி பேச்சுவாா்த்தை நடத்தியதில் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தொடா்ந்து காவல்துறையினா் மாரியம்மாள் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.