மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தந்தையை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

கீரனூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய தந்தையை அடித்துக் கொன்ற மகன் உள்ளிட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :7 மே 2022, 6:40 pm

DIN

கீரனூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய தந்தையை அடித்துக் கொன்ற மகன் உள்ளிட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தவா் கருப்பையா (58). இவா் பணியின்போது இறந்தால் அந்தப் பணி தனக்குக் கிடைக்கும் என்ற தீயநோக்கில் அவரது மகன் பழனிவேல் (35) அண்மையில் அடித்துக் கொன்றாா். பழனிவேலுவின் நண்பா் ஆனந்தன் (48) கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளாா்.

இவா்கள் இருவரையும் கீரனூா் போலீஸாா் கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் இவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரை செய்தாா். ஆட்சியரின் உத்தரவின்பேரில், பழனிவேல், ஆனந்தன் ஆகிய இருவரும் புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து எடுக்கப்பட்டு, சனிக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.