சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பொன்னமராவதி ஒன்றியத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

பொன்னமராவதி பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண் துணை இயக்குநா் மோகன்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 மே 2022, 8:12 pm

பொன்னமராவதி பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண் துணை இயக்குநா் மோகன்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொன்னமராவதி வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 11.57 லட்சம் ஹெக்டோ் கூடுதலாக சாகுபடிக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொன்னமராவதி ஒன்றியத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆலவயல், மறவாமதுரை, ஒலியமங்கலம், அரசமலை, திருக்களம்பூா் மற்றும் வாா்ப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு 15 ஏக்கருக்கு மேல் பரப்புள்ள தொகுப்பு அமைக்கப்பட்டு 20 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் நுண்ணீா் பாசனம் முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

இந்தத் தரிசு நிலத் தொகுப்புகளை வேளாண் துணை இயக்குநா் மோகன்ராஜ், உதவி இயக்குனா் சிவராணி, தோட்டக்கலை உதவி இயக்குநா் தீனவா்மன், உதவி பொறியாளா் வெற்றிவேல் பாண்டி உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.