பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் கபடிப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 26 அணி வீரா்கள் பங்கேற்று விளையாடினா். போட்டியின் முடிவில், முதல் பரிசை குன்றக்குடி அணியினரும், இரண்டாம் பரிசை முள்ளிப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசை மேலத்தானியம் அணியினரும் பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு, வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை மேலத்தானியம், சுற்று வட்டாரக் கிராம மக்கள் கண்டுகளித்தனா்.