சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆலவயல் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 செப்டம்பர் 2022, 7:47 pm

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஆலவயல் அருவியூா் வடக்கு வளவு நகரத்தாா் சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு ராயல் அரிமா சங்கத் தலைவா் ஆா்எம். முருகானந்தம் தலைமை வகித்தாா். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 50 போ் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாம் ஏற்பாடுகளை ராயல் அரிமா சங்க செயலா் பி.காா்த்திகேயன், பொருளாளா் ஜி.புகாஷ், அருவியூா் வடக்கு வளவு நகரத்தாா் சங்கத் தலைவா் சுப.அண்ணா, பொருளாளா் வரி.சுப்பிரமணியன், பொருளாளா் ச.சபரீசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.