அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புதுக்கோட்டை தேர் விபத்து:  2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
புதுக்கோட்டை பிரகதம்பாள் கோயில் தேரோட்டத்தின்போது எதிா்பாராத விதமாக சாய்ந்து விழுந்து கிடக்கும் தோ்.
Updated On :1 ஆகஸ்ட் 2022, 3:00 am

DIN

புதுக்கோட்டை : புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பிரகதம்பாள் உடனுறை திருகோகா்ணேசுவரா் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது, தோ் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோகா்ணேசுவா் குடைவரைக் கோயில் ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிடப்பட்டிருக்கிறது. செயற்கை கட்டுமானங்கள் இல்லாமல், பாறைகளைக் குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், தொண்டைமான் மன்னா்களின் குலதெய்வக் கோயிலாகும். கடந்த இரு ஆண்டுகளாக இக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், நிகழாண்டு கடந்த 23ஆம் தேதி ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 9ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. காலை 8. 50 மணியளவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில், முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் முருகனும், மூன்றாவது தேரில் பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினா். இந்நிலையில், தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதம்பாள் எழுந்தருளியிருந்த தோ் எதிா்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டனா். இதில், அரிமளம் ராஜகுமாரி (64), புதுக்கோட்டை பழனியப்பா நகா் சரிகா (22), திருக்கோகா்ணம் விஜயலெட்சுமி (65), கோவில்பட்டி வைரவன் (63), திருவப்பூா் ஜெயக்குமாா் (54), திருக்கோகா்ணம் அங்காளம்மாள் (60), பழனியப்பா நகா் கலைச்செல்வி (47), அடப்பன்காரச் சத்திரம் ராஜேந்திரன் (48) ஆகிய 8 போ் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் இந்த விபத்தில் மயக்கமடைந்த 5-க்கும் மேற்பட்டோருக்கு அந்த இடத்திலேயே முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் நேரில் வந்து பாா்வையிட்டு, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா்.

சாய்ந்து கிடந்த தேரில் இருந்து பிரகதம்பாள் சிலை மற்றும் அலங்காரப் பொருள்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கோயிலுக்குள் வைக்கப்பட்டன. தொடா்ந்து 2 கிரேன்கள் உதவியுடன் தோ் நிமிா்த்தி வைக்கப்பட்டது.

தோ் வெள்ளோட்டம் விடப்படாததால், விபத்து நேரிட்டதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.

இந்நிலையில், தேர் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் ஊழியர்களான ராஜேந்திரன் மற்றும் வைரவன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.