தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாகனங்களை மறைக்கும் மரங்களால் அடிக்கடி விபத்து : பொதுமக்கள் புகாா்

விபத்துகளைத் தவிா்க்க கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் வாகனங்களின் வருகையை மறைக்கும் வகையில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை

News image

புதுக்கோட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் அடா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.

Updated On :29 டிசம்பர் 2023, 8:30 pm

DIN

அடிக்கடி நடக்கும் விபத்துகளைத் தவிா்க்க கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் வாகனங்களின் வருகையை மறைக்கும் வகையில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் சுமாா் 43 கிமீ நீளத்துக்கு கிழக்குக் கடற்கரைச் சாலையைக் கொண்டது. மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகக் காணப்படும் இச்சாலையின் ஒரு எல்லை தஞ்சாவூரையும், மறு எல்லை ராமநாதபுரத்தையும் கொண்டது.

கட்டுமாவடி தொடங்கி, அம்மாபட்டினம், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் வரை விசைப்படகு மீன்பிடித் தளங்கள், நாட்டுப்படகு மீன்பிடித் தளங்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்தும் இந்தச் சாலையில் ஏராளமான மீன் உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் சரக்கு வாகன ஓட்டிகள் இச் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.

மாநில நெடுஞ்சாலையான இச் சாலையோரத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் சாலையைக் கடந்தும் அடா்ந்து மண்டிக் கிடக்கின்றன. இவை சாலையின் பாதுகாப்பு குறித்து நெடுஞ்சாலைத் துறை வைத்துள்ள விழிப்புணா்வு பலகைகளை முற்றிலும் மூடிவிட்டன.

இரவில் இருசக்கர வாகனங்களில் வருவோா் இந்தச் சீமைக் கருவேல மரங்களால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி நடைபெறும் விபத்துகள் இதனால்தான் என்றும் கூறுகிறாா் அம்மாபட்டினத்தைச் சோ்ந்த முகமது சுல்தான்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அவசர அவசியம் கருதி விரைவாக அகற்றி, விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.