புதுக்கோட்டை: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஹஜ் பெருநாள்- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் வியாழக்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ஏராளமான இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து கொண்டு, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.