புதுகையில் பரவலாக அதிகரிக்கும் காய்ச்சல்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தொற்றாளா்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தொற்றாளா்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.
இதன்படி, கடந்த 4 நாள்களில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சல் தொற்றாளா்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.
இதில், ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மட்டும் 59 போ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் ஒருவருக்கு மட்டும் டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 202 பேருக்கு டெங்குக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 75 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...