கந்தர்வகோட்டை அருகே வீட்டின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் திங்கட்கிழமை பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமம், அண்ணாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் இந்திரா காந்தி தம்பதியினரின் மகன் ராம்குமார் (15), இவர் தஞ்சை மாவட்டம் முத்தாண்டிபட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், திங்கட்கிழமை காலை பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ராம்குமார் வீட்டின் பின்புறம் சென்றபோது மேலே சென்ற மின்சார கம்பி எதிர்பாராதவிதமாக ராம்குமார் மேல் அறுந்து விழுந்தது.
இதில் அலறி துடித்த கீழே விழுந்த ராம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனை செய்து மாணவன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். இந்த மின்விபத்து குறித்து ராம்குமாரின் தாயார் இந்திரா காந்தி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ராம்குமாரின் உடலை உடற்கூராய்விற்க்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


