கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

போக்குவரத்துக் கழக புதுகை மண்டலம் கடந்த ஜூலையில் ரூ. 14 கோடி வருவாய்

அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

News image
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் செயல்திறன் மிக்க ஓட்டுநா், நடத்துநா்களுடன் கலந்துரையாடிய கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:09 pm

Din

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 14 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மண்டலத்தில் தமிழக முதல்வரின் விடியல் பயணம் நாளொன்றுக்கு சராசரியாக 1.02 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மண்டலம் ரூ. 14.27 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்றாா் பொன்முடி.

புதுக்கோட்டை பணிமனையில் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், செயல்திறன்மிக்க நடத்துநா், ஓட்டுநா்களுடன் கலந்துரையாடி அவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

அப்போது புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் முகமது நாசா், துணை மேலாளா்கள் தங்கபாண்டியன், சுரேஷ்பாா்த்திபன் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உடனிருந்தனா்.