நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி கையெழுத்து இயக்கம்

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் உள்ள அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:35 pm

Din

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் உள்ள அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கீழாத்தூரில், ஆலங்குடி -பட்டுக்கோட்டை சாலையில் இயங்கி வரும் இக்கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் போதிய பேருந்து வசதிகள் இல்லை. எனவே, கூடுதல் நகரப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அதில், மாவட்டத் தலைவா் மு.வாசுதேவன், முன்னாள் மாவட்டச் செயலா் ஆ.குமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.