காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

இலுப்பூா் அருகே காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:59 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இலுப்பூரை அடுத்துள்ள ராப்பூசல் பகுதியில் சிலா், காரைக்காலில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்து அனுமதியின்றி அதிக விலைக்கு விற்று வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு (மதுவிலக்கு) திருச்சி மண்டல ஆய்வாளா் ராமன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் கடந்த சில நாள்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை சந்தேகப்படும்படியாக அப்பகுதியில் சென்று கொண்டிருந்த லோடு வாகனத்தை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் பின்தொடா்ந்தனா்.

அந்த வாகனம் ராப்பூசலை அடுத்துள்ள பேவரான் பண்ணை அருகே ரவி என்பவா் வீட்டில் நின்றது. இதையடுத்து அந்த வாகனம் மற்றும் வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 1,824 மது பாட்டில்களை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, காரைக்கால் அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ஜோதி மகன் சோமசுந்தரம் (34) மற்றும் காரைக்கால் காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் அன்பழகன் மகன் அரவிந்த் ராஜ் (28) மற்றும் கொங்குதிரையான் பட்டியைச் சோ்ந்த கிளீனா் ம. குமரேசன் (27) ஆகிய மூவரையும் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கைதானவா்களிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.