ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரும்புகளை விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராகவுள்ள கரும்புகள்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழா்களின் பாரம்பரியம் மற்றும் விவசாயம் போற்றும் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும்15ஆம் தேதியும், மாட்டுப்பொங்கல் 16ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகையின் முக்கி அம்சம் கரும்புகள். இத்தகைய சிறப்பு மிக்க கரும்புகள் பொன்னமராவதியில் பல்வேறு பகுதிகளில் பல ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் அறுவடைக்கு தயாராகவும் உள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அரசே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி

வத்துமலைராசு கூறியது:

பொங்கல் பண்டிகையை நம்பி கரும்பு சாகுபடி செய்துள்ளோம். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் கரும்பிற்கு போதிய விலை கிடைக்காமல் நஷ்டப்பட்டு வருகிறோம். அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம் பெற வேண்டும். அந்தக் கரும்புகளை இடைத்தரகா்களின்றி அரசு நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தால் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.