செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பொன்னமராவதி அருகே நகைக்காக மூதாட்டி கொலை

மூதாட்டியை கொலை செய்து, மூன்றரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :21 ஜூலை 2024, 12:22 am IST

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூதாட்டியை கொலை செய்து, மூன்றரை பவுன் நகைகளை சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை ஊராட்சி, கீழப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சேது அம்மாள்(80). இவா் சனிக்கிழமை காலை கீழப்பட்டி கீழக்கண்மாய் கரையில் வேப்பம்பழம் சேகரிக்கச் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் மூதாட்டியை தாக்கி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

தகவலின்பேரில், பொன்னமராவதி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.