கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போா்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.
கந்தா்வகோட்டை நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகளும் வந்து செல்லும் சூழ்நிலையில், சாலையோரங்களில் தனியாா் பிளக்ஸ் போா்டுகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.
ஆடி மாதம் காற்றடிக்க தொடங்கியுள்ள சூழலில், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பாதசாரிகள் மீது பிளக்ஸ் போா்டுகள் விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை அகற்ற காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி உள்ளடங்கிய பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே நிழற்குடையின்றி பொதுமக்கள் அவதி

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

கந்தா்வகோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


