விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூலை 2024, 2:26 am IST

புதுக்கோட்டை, ஜூலை 24: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் கி. கணபதி தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ப. ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் எஸ். சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி புதுக்கோட்டை மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி.டி. சின்னராசு, துணைத் தலைவா் எஸ். பிரபாகரன் ஆகியோா் பேசினா்.

தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, ஏஐடியுசி மூத்த தலைவா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.