மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2024, 8:56 pm

புதுக்கோட்டை, ஜூலை 24: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் கி. கணபதி தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ப. ஜீவானந்தம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் எஸ். சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி புதுக்கோட்டை மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி.டி. சின்னராசு, துணைத் தலைவா் எஸ். பிரபாகரன் ஆகியோா் பேசினா்.

தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, ஏஐடியுசி மூத்த தலைவா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.