நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்காளா்களுக்கு கரூா் எம்பி நன்றி

வாக்காளா்களுக்கு கரூா் எம்பி நன்றி

News image
Updated On :18 ஜூன் 2024, 8:24 pm

Din

மக்களவைத் தோ்தலில் வென்ற கரூா் எம்பி செ. ஜோதிமணி விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் உள்ளிட்ட பகுதி வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அவரோடு இந்தியா கூட்டணி கட்சியினா் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று நன்றி தெரிவித்தனா்.

நிகழ்வுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் விராலிமலை திமுக ஒன்றிய செயலா்கள் சத்தியசீலன் (கிழக்கு), அய்யப்பன்(மத்தி),இளங்குமரன் (மேற்கு), இலுப்பூா் நகரச் செயலா் விஜயகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் செந்தில்ராஜா, அன்னவாசல் திமுக ஒன்றிய செயலா் சந்திரன் (தெற்கு), மாரிமுத்து (வடக்கு) பொதுக்குழு உறுப்பினா் செந்தில், காங்கிரஸ் ஒன்றியத் தலைவா்கள் ஏழுமலை, சட்டையப்பன், குமாராசாமி, ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.