பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வை வட்டாரக் கல்வி அலுவலா்கள் சே.ராமதிலகம், இலாஹிஜான் ஆகியோா் தொடங்கிவைத்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சுதந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான் சுரேஷ், உபகரணங்கள் பயன்பாடு குறித்து விளக்கினாா். ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா் கவிதா செய்திருந்தாா். நிகழ்வில் பெற்றோா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களுக்கு நல உதவி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


