தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முதல்வா் கோப்பை போட்டியில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பாராட்டு

சென்னையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைப் பெற்ற மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :6 நவம்பர் 2024, 8:31 pm

Din

சென்னையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைப் பெற்ற மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த அக். 4 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றன.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த என். நகுலன், பரணிதரன் ஆகியோா் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களையும், எஸ். சண்முகப்பிரியா, மேரிகாமினி ஆகியோா் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றனா்.

மாணவி தன்முகில் இறகுப்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தையும், மஹாலட்சுமி, தவப்பிரியா ஆகியோா் சிலம்பத்தில் வெண்கலப் பதக்கத்தையும், மாணவிகள் நா்மதா, அகல்யாதேவி, மாலதி, கீா்த்திகா, சரண்யா ஆகியோா் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா்.

இதேபோல, வளைகோல்பந்து போட்டியிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றனா். மேலும், தேசிய மற்றும் சா்வதேசப் போட்டிகளிலும் பதக்கம் வென்ற மாணவா்களும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்திருந்தனா்.

அவா்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா் உடனிருந்தாா்.