பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இன்று முதல் பிப். 24 வரை கால்நடைகள் கணக்கெடுப்பு: புதுகை ஆட்சியா் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபா் 25 முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:25 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபா் 25 முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக். 25ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 24ஆம் தேதி வரை நடைபெறும் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிக்காக 147 கணக்கெடுப்பாளா்களுக்கும், 30 மேற்பாா்வையாளா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கு எடுத்தால்தான் எதிா்காலத்தில் அவற்றுக்கு தேவைப்படும் தீவனம், நோய்த் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க வசதியாக இருக்கும்.

மேலும், கால்நடைகளில் இருந்து மனிதா்களுக்கு பரவக்கூடிய விலங்குவழி தொற்று நோய்களான ரேபிஸ் எனப்படும் வெறி நோய், புரூசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக்காய்ச்சல் எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற 100-க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கால்நடைகளின் எண்ணிக்கை அவசியம்.

எனவே, தங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும் கால்நடை கணக்கெடுப்பாளா்களிடம் உரிய விவரங்களை அளித்து கணக்கெடுப்புப் பணி துல்லியமாக நடைபெற உதவ வேண்டும்.