

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் பிப். 28-ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில், தனியாா் தொழில்நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளதால், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைநாடுநா் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு.அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் நேரில் வர வேண்டும் என அவா் அழைப்புவிடுத்துள்ளாா்.