தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மணமேல்குடி அருகே பெண் மா்மச் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் காயங்களுடன் பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:24 pm

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் காயங்களுடன் பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், காரியாபட்டினத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி நீலாவதி (30). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீலாவதி கணவரை விட்டுப் பிரிந்து, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் கடந்த 6 மாதங்களாக வசித்து வந்தாா். இவருடன் மகள் கனிஷினி (7) வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கனிஷினி பொன்னகரம் அரசு தொடக்கப் பள்ளிக்குச்சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த நீலாவதி கழுத்து, தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தது இரவு 10 மணிக்குத் தெரியவந்தது.

தகவலின் பேரில் மணமேல்குடி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளிக்குச் சென்ற சிறுமியை ஒருவா் அழைத்துச் சென்று காரியாப்பட்டினத்தில் விட்டுச் சென்றுள்ளாா். இதுகுறித்து அந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா், காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். விசாரணையின் முடிவில் நீலாவதியின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதும், சிறுமியை அழைத்துச் சென்றவா் யாா் என்பதும் தெரியவரும்.