ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தலைக்கவசம் அவசியம் விழிப்புணா்வு வாகனப் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாா்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:30 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுக்காக மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சிகளில் வழக்குரைஞா்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சங்க நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.