அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை உயா்நீதிமன்ற பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் விசாரணை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.

News image
சென்னை உயா்நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து திங்கள்கிழமை முதல் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்தது. கடந்த 1891-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கல்லூரியில், 2008-ஆம் ஆண்டு இரு பிரிவு மாணவா்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சட்டக் கல்லூரி இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பாரம்பரியக் கட்டடத்தை தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றம் வசம் ஒப்படைத்தது.

மேலும், இந்த பாரம்பரியக் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.23 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. சீரமைப்பு பணிகளுக்குப் பின்னா் அங்கு கூடுதலாக 6 நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த கூடுதல் நீதிமன்ற கட்டடம் கடந்தாண்டு அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த கூடுதல் பாரம்பரியக் கட்டடத்தில் இருந்து திங்கள்கிழமை முதல் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா். இங்குள்ள 6 நீதிமன்ற அறைகளில், பழைய உரிமையியல், குற்றவியல் மற்றும் ரிட் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் முதலாவது அமா்வில் அமா்ந்து வழக்குகளை விசாரித்தனா். மேலும், நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, டி.வினோத்குமாா், கே.குமரேஷ்பாபு, ஆா்.சக்திவேல் ஆகியோா் மற்ற 5 நீதிமன்ற அறைகளில் வழக்குகளை விசாரித்தனா்.