ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தல்

News image
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், சங்கச் செயலா் கா. ஜெயபாலனுக்கு விருது வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா.
Updated On :17 டிசம்பர் 2025, 6:50 pm

Syndication

மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா பொது முடக்கக் காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை மத்திய ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற தேதியின் அடிப்படையில் ஓய்வூதியா்களை பிரிக்கும் ஓய்வூதிய விதிகள் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. சரவணன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மெ. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டச் செயலா் கா.ஜெயபாலனுக்கு விருது வழங்கி புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா பேசினாா்.

80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களை சிறப்பு செய்து மாவட்ட கூடுதல் கருவூல அலுவலா் செந்தமிழ்செல்வி வாழ்த்திப் பேசினாா்.

மாநில இணைச் செயலா் க. கருப்பையா நிறைவுரையாற்றினாா். முன்னதாக அ. கணேசன் வரவேற்றாா். நிறைவாக ந. கிருஷ்ணன் நன்றி கூறினாா்.