அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

ஆலங்குடி நூலகத்தில் பயிற்சிபெற்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சிபெற்று வருவாய்த் துறையில் பணிநியமன ஆணை பெற்றவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 11:50 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நூலகத்தில் பயிற்சிபெற்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சிபெற்று வருவாய்த் துறையில் பணிநியமன ஆணை பெற்றவருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள கே. ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் உ. ஆரோக்கிய ஜான்சி. இவா், ஆலங்குடி கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்று, வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவரை, நூலகா் சுடா்வேல் மற்றும் வாசகா் வட்டத்தினா் சனிக்கிழமை பாராட்டினா்.