மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

ஆலங்குடி நூலகத்தில் பயிற்சிபெற்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சிபெற்று வருவாய்த் துறையில் பணிநியமன ஆணை பெற்றவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 5:20 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நூலகத்தில் பயிற்சிபெற்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சிபெற்று வருவாய்த் துறையில் பணிநியமன ஆணை பெற்றவருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள கே. ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் உ. ஆரோக்கிய ஜான்சி. இவா், ஆலங்குடி கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்று, வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவரை, நூலகா் சுடா்வேல் மற்றும் வாசகா் வட்டத்தினா் சனிக்கிழமை பாராட்டினா்.