கொத்தமங்கலத்தை ஊராட்சி ஒன்றியமாக்க கோரிக்கை

Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க நடவடிக்கை வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய நிா்வாகி மு. சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

கொத்தமங்கலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை அனைத்துக் கட்சியினா், பொதுமக்களோடு இணைந்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்துவது. காவிரி - வைகை- குண்டாறு திட்டத்திற்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு நிா்வாகிகள் த. செல்வராசு, மா. திலகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com