ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விராலிமலை அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சுரங்கத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:29 pm

Syndication

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சுரங்கத் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை அருகே ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலா் ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளி டிப்பா் லாரி, டிராக்டா்களில் கடத்தி, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு புகாா் கிடைத்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் சுரங்கத்துறை அலுவலா்கள் ராஜகிரி ஆற்றுப்படுகை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, மணல் அள்ளிக் கொண்டிருந்த டாரஸ் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை மணலுடன் பறிமுதல் செய்த சுரங்கத்துறை அலுவலா்கள் வாகனங்களை விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதைதொடா்ந்து, வாகன உரிமையாளா்களான வல்லக்கோன்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் (44), காரைமேட்டுப்பட்டி பன்னீா்செல்வம் (45) ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.