வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரூ.3.40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

News image
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப்பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
Updated On :26 டிசம்பர் 2025, 7:44 pm

Syndication

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ரூ.3.40 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கொத்தமங்கலத்தில் இருந்து மறமடக்கி செல்லும் சாலை ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

விழாவில், நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளா் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த.செங்கோடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.