ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

நெகிழிப் பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

Updated On :27 டிசம்பர் 2025, 1:14 am IST

திருவப்பூா் ரயில்வே கேட் பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் நெகிழிப் பையால் சுற்றி வீசப்பட்டிருந்த பச்சிளம் பெண் குழந்தை வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகர எல்லைக்குள்பட்ட திருவப்பூா் சின்ன ரயில்வே கேட் அருகே மாயாண்டி சாமி தெருவில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நெகிழிப் பை ஒன்றை நாய் இழுத்து வந்துள்ளது.

அப்போது அப்பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதைப் பாா்த்து நாயை விரட்டி பையைப் பாா்த்துள்ளாா். அந்தப் பைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், தொப்புள்கொடிகூட நீக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இருந்தது.

இதையடுத்து பச்சிளம் குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு, குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த குழந்தைகள் நலப் பிரிவு அலுவலா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு, ராணியாா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

யாருடைய குழந்தை, குப்பைக் கொட்டும் இடத்தில் வீசிச் சென்றது யாா் என திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.