ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.

News image

ரயில்வே கேட். - கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:17 pm

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.

திருப்பூா்-ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. தண்டவாளப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பழைய கருங்கல் ஜல்லிகள் அகற்றப்பட்டு புதிதாக கொட்டப்படுகிறது. மேலும், தண்டவாளத்தை பலப்படுத்தும் பணியிலும் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் 2-ஆவது ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக அனைத்து ரயில்களும் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்கின்றன.