தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்துக்கு புதுக்கோட்டையில் 11 அரசுப் பள்ளிகள் தோ்வு

தமிழக அரசின் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:59 pm

Syndication

தமிழக அரசின் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு ஓா் அரசு மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல, மாணவா்களின் தனித்திறன்களை மேம்படுத்தி, உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் ‘வெற்றிப் பள்ளிகள்’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கு மாநிலம் முழுவதும் 346 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை ராணியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி, கந்தா்வகோட்டை, ஆலங்குடி, விராலிமலை ஆகிய இடங்களிலுள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 11 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.