புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், கல்லுக்குவியல்பட்டியில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் குடிநீா் மற்றும் சாலை வசதி செய்துத் தர வேண்டும் என அங்கு வசிக்கும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநங்கைகள் சிறப்புக் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அவா்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனா்.
கடந்த 2011-இல் கல்லுக்குவியல்பட்டியில் 20 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
திருநங்கைகள் பெயா் மாற்றம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்றும், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டக் குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, இந்தக் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட சமூக நல அலுவலா் க.ந.கோகுலப்பிரியா, திருநங்கைகள் சங்கத் தலைவிகள் அசீனா நாயக், ரெ. ஷிவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடிநீா் கேட்டு சாலை மறியல்

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு இலவச பேருந்து வசதி கோரி மனு

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்: 42 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


