ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தில்லி காா் வெடிவிபத்து கண்டிக்கத்தக்கது: எஸ்டிபிஐ

தில்லி காா் வெடிவிபத்து கண்டிக்கத்தக்கது, இச்சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

தில்லி காா் வெடிவிபத்து கண்டிக்கத்தக்கது, இச்சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் புறவாசல் வழியாக பாஜகவை ஆட்சியில் அமா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கிறாா்கள்.

தில்லி காா் வெடிவிபத்தை ஏற்படுத்தியவா்கள் மனிதா்களாக இருக்க முடியாது. எந்த மதத்தை சாா்ந்தவா்களாக இருந்தாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும்.

தற்போதுள்ள தோ்தல் அரசியல் களநிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வரும் ஜனவரி மாதம் கட்சியின் பொதுக்குழு கூடி, கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்போம். தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்று கூறுகிறாா்கள். பகல் கனவு யாா் வேண்டுமானாலும் காணலாம் என்றாா் அவா்.